Saturday 21 January 2012

Mother.

அம்மா.

நம்மை பெற்றெடுத்து பற்று வைத்தவள்
நாளும் கண் விழித்து காவல் செய்தவள்
அன்பு எனும் உளி கொண்டு
அணு அணுவாய் செதுக்கியவள்
கருணைக்கு என்றும் சாட்சியாய் அமைந்தவள்
ஆரவாரம் ஏதுமின்றி ஆளுமையை காட்டுபவள்.
இரவுகளில் இன்னிசைத்து
இறை உணர்வை ஊட்டியவள்
வாழ்க்கை எனும் வானவில்லில்
இயற்கையாய் வண்ணம் சேர்த்தவள்
ஆனந்தம் மட்டுமே நம்மை அணுக
ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்பவள்.BY.ஆதித்தன்.

No comments:

Post a Comment