Saturday 3 March 2012

word


வார்த்தை
 
மீண்டுமொருமுறை

உன்னை

நினைவுப் படுத்தாதேயென்று

எச்சரிக்கும் கணங்களிலும்

உள்நெஞ்சுக்குள்

உதித்தெழுகிறது

உன்முகம்...!




உறக்கம் வராத

நள்ளிரவு நேரமெங்கும்

உன்னை மறக்க துடித்தும்

என் இதயம் வழியே

நினைவை உமிழ்ந்து

உதடுகளும் உச்சரிக்கிறது

உன் பெயரை...!





குருதிக் குழாய்களுக்குள்

குறுக்கு நெடுக்குமாய்

பாய்ந்துக் கொண்டிருக்கிறது

இதயத்திற்குள் நிரம்பி வழிந்த

உன் நினைவுகள்...
நன்றி

No comments:

Post a Comment